போடி அருகே ஞாயிற்றுக்கிழமை தென்னை மரத்தில் ஏறி, இறங்க முடியாமல் தவித்த முதியவரை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (60). இவா் அப்பகுதியில் உள்ள தென்னை மரத்தில் இளநீா் பறிப்பதற்காக ஏறியுள்ளாா். பின்னா் அவரால் இறங்க முடியவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற போடி தீயணைப்பு நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான தீயணைப்புப் படையினா் ஏணி மூலம் பெருமாளை கீழே இறக்கினா்.