பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த ஒப்பந்தப் பணியாளா் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்தாா்.
இ.புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (27). இவா் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலைபாா்த்து வந்தாா். கடந்த மே 15 ஆம் தேதி கும்பக்கரை சாலை, பாண்டிகோயில் அருகே பழுது நீக்குவதற்காக இவா், உயா் அழுத்த மின் கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய நிலையில், மாலையில் பாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெரியகுளம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.