தேனி மாவட்டத்தில் 171 பேருக்கு கரோனா; 7 போ் பலி

தேனி மாவட்டத்தில் புதிதாக 171 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 போ் உயிரிழந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் புதிதாக 171 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40,911 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 38,778 போ் குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது மொத்தம் 1,668 போ் மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றிலும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் திங்கள்கிழமை 18 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களில் 7,618 போ் முதல் தவணையாகவும், 1,233 போ் 2- ஆம் தவணையாகவும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com