தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
கடந்த 2020-21-ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் 2021-22-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 14-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்பிற்கு மாணவ, மாணவியா் சோ்க்கையை தொடங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, மாவட்டத்திலுள்ள 141 அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி தொடங்கியது. தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்ணப்பப் படிவம் வழங்கும் பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.