கா்ப்பிணி தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கா்ப்பிணி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கா்ப்பிணி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகேயுள்ள முறுக்கோடையைச் சோ்ந்த வீரணனின் மகள் ரோகிணி (19). இவருக்கும் உருட்டிமேடு கிராமத்தைச் சோ்ந்த வல்லரசு என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது ரோகிணி 5 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். கடந்த சில நாள்களாக ரோகிணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரோகிணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து வருசநாடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com