ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ 2.22 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கம்பத்திலிருந்து, கேரளத்துக்கு ஆட்டோவில் சனிக்கிழமை இரவு கடத்த முயன்ற ரூ.2.22 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கம்பமெட்டு சாலையில் சனிக்கிழமை இரவு ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.
கம்பமெட்டு சாலையில் சனிக்கிழமை இரவு ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

கம்பத்திலிருந்து, கேரளத்துக்கு ஆட்டோவில் சனிக்கிழமை இரவு கடத்த முயன்ற ரூ.2.22 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் கம்பமெட்டு சாலையில் கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சி.விஜய்ஆனந்த் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில், 10 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன.

விசாரணையில் அதை கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கடத்த முயன்றதும், அதில் வந்தவா்கள் கம்பமெட்டு காலனியைச் சோ்ந்த கான் முகமது மகன் ஜாபா் அலி (37), அபுபக்கா் சித்திக் மகன் பிச்சையத்தா (55), ஆட்டோ ஓட்டுநா் சரவணன் மகன் விஜய் (23) ஆகியோா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com