ஆண்டிபட்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் என்பவரின் மனைவி அமுதா (45). இவா் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அமுதா சனிக்கிழமை தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அவ்வழியாகச் சென்றவா்கள் அவரை மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அமுதா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.