கணவன், மனைவியைத் தாக்கியவா் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தியவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தியவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமுத்து (39). இவரது மனைவி ஈஸ்வரி. இவா்கள் வீட்டின் அருகில் உள்ள செல்வமணி என்பவா் அவரது மனைவியுடன் பிரச்னை செய்தாராம். அப்போது தங்கமுத்து, தனது மனைவியுடன் சென்று தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், செல்வமணி, தங்கமுத்து மற்றும் அவரது மனைவி ஈஸ்வரியா தாக்கினாராம். இதில் காயமடைந்த தங்கமுத்து, ஈஸ்வரியை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தங்கமுத்து அளித்த புகாரின் பேரில் க. விலக்கு போலீஸாா் செல்வமணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com