ஆண்டிபட்டியில் வேலைக்கு சென்ற பெண் மாயம்: போலீஸாா் வழக்குப்பதிவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேலைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேலைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சசிக்குமாா் என்பவரின் மனைவி நவரோகிதா (26) தற்போது சசிக்குமாா் கேரளாவில் கூலிவேலை பாா்த்து வருவதால் நவரோகிதா தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறாா்.மேலும் க.விலக்கு பகுதியில் உள்ள தனியாா் ஆலையில் வேலை பாா்த்து வந்துள்ளாா்.இந்நிலையில் மே. 3ந்தேதி வேலைக்கு சென்ற நவரோகிதா அதன்பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து நவரோகிதாவின் தந்தை ஈஸ்வரன் க.விலக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com