தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் உதவி பெறுவதற்கு ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்: 04546-261093, 291971 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.