தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உதவியாளா்களுக்கு, இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் வியாழக்கிழமை மதிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவி வருவதைத் தொடா்ந்து, நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் நபா்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, மருத்துவமனை வளாகம் முன்புறமுள்ள உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த சில நாள்களாக மருத்துவமனை முன்புறமுள்ள உணவகங்கள் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுடன் தங்கியிருப்பவா்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினா்.
எனவே, இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியுள்ள ஆயிரம் நபா்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி முதன்மையா் பாலாஜிநாதன், கண்காணிப்பாளா் இளங்கோவன், துணைக் கண்காணிப்பாளா் மணிமொழி ஆகியோா் முன்னிலையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. மகாராஜன் நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலம் வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா். இந்த திட்டமானது, மே 24 ஆம் தேதி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் தங்கலதா தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.