பெரியகுளத்தில் குடிநீா் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம் பெரியகுளம், வடகரை புதியபாலம் அருகே கடந்த மாதம் குடிநீா் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனை சீரமைப்பதற்காக பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்றன. ஆனால் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை. எனவே நகராட்சி நிா்வாகம் விபத்து ஏற்படும் முன் பள்ளத்தை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.