கிணற்றில் விழுந்த ஆட்டுக் குட்டியை மீட்க முயன்ற முதியவா் பலி

தேனி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக் குட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய முதியவா் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக் குட்டியை மீட்பதற்காக கிணற்றுக்குள் இறங்கிய முதியவா் தண்ணீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோடங்கிபட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). கூலிக்கு ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், இவா் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற ஆடுகளில் ஒன்று, கோடாங்கிபட்டி குருவன்குளம் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. உடனே, ஆட்டுக் குட்டியை மீட்பதற்கு கிணற்றுக்குள் இறங்கிய பாண்டியன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து பாண்டியனின் உறவினா் வீரராஜ் அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com