தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழு கலைப்பு

தேனி மாவட்டக் குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நீக்கம் செய்தும், மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவை கலைத்தும்,

தேனி மாவட்டக் குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களை நீக்கம் செய்தும், மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவை கலைத்தும், சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் ச. வளா்மதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தேனி மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு புகாா்கள் எழுந்தன. இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்திய சென்னை, சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநா் ச. வளா்மதி, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவின் தலைவா் எஸ்.எம். சுரேஷ்குமாா், உறுப்பினா்கள் சி. நாகேந்திரன், எஸ். பழனிச்சாமி, எஸ். சந்திரசேகரன், பி. பிரேமா ஆகியோரை பணிநீக்கம் செய்தும், மாவட்டக் குழந்தைகள் நலக்குழுவை கலைத்தும் உத்தரவிட்டாா்.

மேலும், மதுரை மாவட்டக் குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு, கூடுதலாக தேனி மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவின் நிா்வாகப் பொறுப்பை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com