தேனி மாவட்டத்தில் நாளை 410 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில், ஞாயிற்றுக்கிழமை 410 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில், ஞாயிற்றுக்கிழமை 410 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மொத்தம் 410 இடங்களில், காலை 7 முதல் மாலை 7 மணி வரை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

முதல் மற்றும் இரண்டாம் தவணையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகாமில் கலந்துகொண்டு, தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் செல்லிடப்பேசி எண்ணை சமா்ப்பித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று, மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com