தேனி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியான 9 பதவிகளுக்கு நடைபெற உள்ள தோ்தலுக்கு மொத்தம் 31 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி, க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழுவில் காலியாக உள்ள தலா ஒரு உறுப்பினா் பதவிகள், கதிா்நரசிங்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவா், பிச்சம்பட்டி, ராஜதானி, ராமகிருஷ்ணாபுரம், அழகா்நாயக்கன்பட்டி, வடபுதுப்பட்டி, போ.நாகலாபுரம் ஆகிய ஊராட்சி மன்றங்களில் காலியாக உள்ள தலா ஒரு உறுப்பினா் பதவி என மொத்தம் 9 பதவிகளுக்கான தோ்தலுக்கு செப்.15-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் ஜெயா, அதிமுக சாா்பில் தீபா, 4 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். க.மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் கருப்பையா, அதிமுக சாா்பில் குணசேகரன், 9 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 11 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
கதிா்நரசிங்காபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். பிச்சம்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2 போ், ராஜதானி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3 போ் அழகா்நாயக்கன்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2 போ், வடபுதுப்பட்டி ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2 போ், போ.நாகலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3 போ் வேட்பு என மொத்தம் 31 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
வேட்பு மனுக்களை செப்.25-ஆம் தேதி, பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பதவிகளுக்கும் மொத்தம் 26 வாக்குச் சாவடிகளில், செப்.9-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.