பெரியகுளத்தில் மனைவியை வெட்டிய கணவா் கைது

பெரியகுளத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், ஜமீன்தாா் பாடசாலையைச் சோ்ந்தவா் முருகன் (60). இவரது மனைவி வசந்தி (55). இவா்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா். சமீபத்தில், இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு இணைந்து வாழ்ந்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, மதுபோதையில் இருந்த முருகன் வீட்டிலிருந்த அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த வசந்தி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவம் குறித்து, பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com