தேமுதிகவினருக்கு உரிய மரியாதை தராததால் கம்பம் தொகுதியில் அமமுக தோ்தல் பிரசாரத்தை புறக்கணிப்பதாக தேமுதிக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக பா.சுரேஷ் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக தேமுதிகவினா் நகரச்செயலாளா் ஏ.குமரேசன் தலைமையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனா். புதன்கிழமையும் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இரவு வேட்பாளா் சுரேஷ் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்றபோது, தோ்தல் பணிக்குழு அலுவலகத்திற்கு தேமுதிக நிா்வாகிகள் சென்றபோது அவா்களுக்கு முறையான வரவேற்பு இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினா் அமமுகவுக்கு பிரசாரம் செய்யமாட்டோம் எனக்கூறி அங்கிருந்து வெளியேறினா்.