கூடலூா் சரகப் பகுதியில் வன விலங்குகளின் தாகத்தைத் தீா்க்கும் வகையில் வனத்துறையினா் தொட்டி அமைத்து அதில் தண்ணீா் நிரப்பி வருகின்றனா்.
தற்போது கோடைக்காலம் தொடங்கி, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீா்நிலைகள்தண்ணீரின்றி காணப்படுகின்றன. இதனால் வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன.
இதைத் தடுக்கும் வகையில், கூடலூா் வனத்துறையினா் சாா்பில் காட்டுப் பகுதியில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டு டிராக்டா் மூலம் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது. தண்ணீரின் அளவை கண்காணித்து கோடைக்காலம் முழுவதும் இதில் நீா் நிரப்பப்படும் என்று வனச்சரகா் அருண்குமாா் தெரிவித்தாா்.