வாக்குச் சாவடி முன் வாக்கு சேகரிப்பு: 3 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே வாக்குச்சாவடி முன்பாக வாக்கு சேகரித்த அரசியல் கட்சியினா் 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே வாக்குச்சாவடி முன்பாக வாக்கு சேகரித்த அரசியல் கட்சியினா் 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

க.விலக்கு அருகே சிலோன் காலனி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தல் விதிகளை மீறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக அமமுக ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன், உதய் ஆகிய 2 பேரையும் பிடித்த தோ்தல் பறக்கும் படையினா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் அவா்கள் 2 போ் மீதும் வழக்குப்பதிவு செய்தனா்.

இதேபோன்று கண்டமனூா் அருகே ராஜேந்திரா நகா்ப் பகுதியைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி ராஜேந்திரன் என்பவா் தோ்தல் விதிகளை மீறி வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்கு சேகரித்ததாக தோ்தல் அலுவலா்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில் கண்டமனூா் போலீஸாா் அவா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com