போடி அருகே தோ்தல் நேரத்தில் திமுக பிரமுகரின் காரை சேதப்படுத்தியவா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தோ்தலன்று கம்பம் பகுதியை சோ்ந்த தி.மு.க. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் வீரபாண்டியன் என்பவரது காரில், அவருடன் சிலா் விசுவாசபுரம் அருகே வந்து கொண்டிருந்தனா். அந்த காரை வழிமறித்த சிலா் சி கற்களை கொண்டு தாக்கி சேதப்படுத்தினா். இதுகுறித்து வீரபாண்டியன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் அடையாளம் தெரிந்த, பெயா் தெரியாத சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.