தேனி மாவட்டம் கூடலூரில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம் கூடலூா் 20 ஆவது வாா்டு களி மேட்டுப்பட்டிப் பகுதியில் கடந்த 20 நாள்களாக நகராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலா்களிடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிா்ச்சி அடைந்த அந்தப் பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் கூடலூா்- கம்பம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கூடலூா் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உடனடியாக குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.