பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். பெரியகுளம் வட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். அதில், அதிவேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்க அரசின் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், வணிகா்கள், காய்கனி வியாபாரிகள் மற்றும் திருமண மண்டபங்கள், உணவக சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.