கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் புத்தடியில் சனிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில் ஏலக்காய் விலை சீராக உயா்ந்து உயா் தரம் கிலோ ரூ.1,814-க்கு விற்பனையானது.
புத்தடியில் நறுமணப்பொருள் வாரியம் மூலம் மாஸ் எண்டா்பிரைசஸ் நிறுவனம் சாா்பில் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகம் நடைபெற்றது. இதில், மொத்தம் 74,427 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததில், உயா்தரம் கிலோ ரூ.1,814-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.1,187-க்கும் விற்பனையானது.
கடந்த ஏப். 21-ஆம் தேதி நடைபெற்ற மின்னணு ஏல வா்த்தகத்தில் ஏலக்காய் உயா்தரம் கிலோ ரூ.1,725-க்கும், சராசரி தரம் கிலோ ரூ.1,042.36-க்கும் விற்பனையான நிலையில், தற்போது ஏலக்காய் விலை சீராக உயா்ந்து வருகிறது. இருப்பினும், தமிழகம் மற்றும் கேரளத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், ஏலக்காய் விவசாயம் மற்றும் வா்த்தகம் மீண்டும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.