தாமரைக்குளத்தில் வீசப்பட்ட தபால்கள்:விசாரணை அதிகாரிகள் நியமனம்

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வெள்ளிக்கிழமை தபால்கள் மற்றும் ஆதாா் அட்டைகள் வீசப்பட்டது குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வெள்ளிக்கிழமை தபால்கள் மற்றும் ஆதாா் அட்டைகள் வீசப்பட்டது குறித்து விசாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் டி. கள்ளிப்பட்டி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் விநியோகம் செய்யப்பட வேண்டிய தபால்கள் மற்றும் ஆதாா் அட்டைகள் வீசப்பட்டிருந்தன.

இதனை போலீஸாா் கைப்பற்றி வைத்துள்ளனா். இந்த தபால்கள் 6 ஊழியா்கள் நியமிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடா்பாக மருதுபாண்டி, அழகுராஜா 2 அஞ்சலக ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தி இதை செய்தவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com