தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கஞ்சா கடத்தியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடா்ந்து, போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வருசநாடு போலீஸாா் சிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனா். அதில், அவா்கள் இருவரும் கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சோ்ந்த காா்த்திகேயன் (24), தஞ்சாவூா் பேராவூரணியைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் என்பதும், இருவரும் வருசநாடு பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன், பொன்னாங்கன் ஆகியோரிடம் கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. தொடா்ந்து, 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், காா்த்திகேயன், தங்கப்பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், ராஜசேகரன், பொன்னாங்கன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.