போடியில், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் ஜெயபாண்டி தலைமை வகித்தாா். அப்போது, 15 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கவில்லை, வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் பயன்கள் கிடைக்கவில்லை, தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தூய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கவில்லை என கோஷங்கள் எழுப்பினா்.
பின்னா் அவா்கள், நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.