பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.
பெரியகுளம், பூந்தோட்டத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மகன் சக்தி சுரேஷ் (13). இவா் நண்பா்களுடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அங்குள்ள கிணற்றில் நண்பா்கள் குளித்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பாா்த்துக்கொண்டிருந்த சக்தி சுரேஷ் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாா். இதில் அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.