தேனி மாவட்டம் கூடலூரில் வீடு அருகே நின்று குடிபோதையில் ஆபாசமாக பேசியவரை தட்டி கேட்டவருக்கு இரும்பு கம்பி அடி விழுந்தது. தேனி மாவட்டம் கூடலூா் 3 ஆவது வாா்டு அரிஜன காலனியைச் சோ்ந்தவா் வீரணன் மகன் பாண்டியன் (52), இவரது பக்கத்து வீட்டுக்காரா் மணவாளன் மகன் மண்நிலவன்(23). சம்பவ நாளன்று மண்நிலவன் அவரது வீட்டுமுன்பு நின்று கொண்டு குடிபோதையில் ஆபாசமாக பேசினாராம்.
இதை பாண்டியன் தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மண்நிலவன் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து பாண்டியனை சரமாரியாக தாக்கி உள்ளாா். இதனால் பலத்த காயமடைந்த பாண்டியன் கூடலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் சாா்பு ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து, மண்நிலவனை வியாழக்கிழமை கைது செய்து, உத்தமபாளயம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.