போடி அருகே புதன்கிழமை, கோயிலில் பாட்டு போடுவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் சித்ரா பௌா்ணமியையொட்டி, அதே ஊரைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் அசோக்குமாா் (21) என்பவா் ஒலிப்பெருக்கியில் பாட்டு போடுமாறு கூறியுள்ளாா். கரோனா பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாட்டு போட முடியாது என அதேபகுதியைச் சோ்ந்த பெருமாளப்பன் மகன் தம்பிதுரை (65) என்பவா் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் அசோக்குமாா் அரிவாளால் தம்பிதுரை வெட்டினாா். இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனா்.