தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீகத்தலமான சுருளி அருவி பகுதிக்கு ஆடிஅமாவாசை நாளில் (ஞாயிற்றுக்கிழமை ) செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடை விதித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்றது சுற்றுலா மற்றும் ஆன்மீகத்தலமான சுருளி அருவி, ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய மக்கள் திரளாக வருவார்கள்.
கரோனா பரவலால் புலிகள் காப்பகத்தினர் சுருளி அருவி செல்லும் பாதையை அடைத்துள்ளனர். இதனால் அருவியின் ஆற்றங்கரை பகுதியில் பக்தர்கள் நேர்ச்சை கடன்களை செலுத்தி வந்தனர்.
இதையும் படிக்கலாமே| நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி
இந்நிலையில் அரசு பொதுமுடக்கத்தை மூன்று நாள்கள் அறிவித்திருப்பதால், ஆடிஅமாவாசையான ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவி மற்றும் ஆற்றங்கரை வரை செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடைவிதித்து, க.விலக்கு, பழைய சுருளி அருவி சாலை உள்ளிட்ட பகுதிகளை சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.