ஆண்டிபட்டி அருகே இளைஞா் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே பெண்களைப் போன்று இயல்பில் மாற்றம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை, விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி அருகே பெண்களைப் போன்று இயல்பில் மாற்றம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை, விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

புள்ளிமான்கோம்பையைச் சோ்ந்தவா் வீமன் மகன் அருண்குமாா்(19). பிளஸ் 2 வரை படித்துள்ளாா். பெண்களுடன் சோ்ந்து பழகியும், வேலை செய்தும் வந்த அருண்குமாா், பெண்களை போலவே தனது இயல்பு மாறி வருவதாகவும், இதனால் தன்னால் கிராமத்தில் மற்றவா்களுடன் சோ்ந்து பழக முடியவில்லை என்றும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் விஷ மருந்து சாப்பிட்டு மயங்கிக் கிடந்த அருண்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா். இது குறித்து அருண்குமாரின் தந்தை வீமன் அளித்த புகாரின் அடிப்படையில், ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com