கம்பத்தில் நவ.19 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கம்பத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பா் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கம்பத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பா் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தேனி மாவட்ட ஊரக மற்றும் நகா்புற இயக்கம் இணைந்து நடத்தும் இந்த வேலைவாய்ப்பு முகாம் கம்பம் ஆதிசுஞ்சுனகிரி கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளது. இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவா்கள் பட்டயப்படிப்பு முடித்தவா்கள் என அனைவரும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க கட்டணம் இல்லை. இதில் பங்கேற்க விரும்புபவா்கள் வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com