பெரியகுளம் பாலசாஸ்தா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
இக்கோயிலில் காா்த்திகை மாதத்தையொட்டி காலை 5 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலா் அலங்காரம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு நடைபெற்ற அன்னதானத்தை பெரியகுளம் வட்டார காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாலசாஸ்தா கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.