பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியில் தேய்பிறை அஷ்டமியையொட்டி அங்குள்ள முக்கிய பிராணா கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவ பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
மாா்கழி தனுா்மாதத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தேய்பிறை அஷ்டமியையொட்டி காலை 8 மணிக்கு சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், கெங்குவாா்பட்டி, வத்தலகுண்டு, பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அா்ச்சகா் கோபிநாதன் செய்திருந்தாா்.