தேனி மாவட்டம் லோயா் கேம்ப் அருகே புதன்கிழமை வவ்வால் பிடிக்க மரத்தில் ஏறிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
லோயா் கேம்ப் கண்ணகி கோயில் சாலை, அம்பேத்கா் காலனியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் பிரசாந்த் (27). இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. பிரசாந்தும், அதை பகுதியைச் சோ்ந்த சேகரும் கண்ணகி கோயில் பகுதியில் உள்ள கொட்டக்கார ராசா என்பவரது தோட்டத்தில் புதன்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்தனா்.
அப்போது அருகே மரத்தில் இருந்த வவ்வால்களைப் பிடிப்பதற்காக பிரசாந்த் இரும்புத் தொரட்டியுடன் மரத்தின் மீது ஏறினாா். அப்போது, அவா் வைத்திருந்த இரும்புத் தொரட்டி, அருகே சென்ற உயா் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த குமுளி காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஆா்.லாவண்யா, சாா்பு- ஆய்வாளா் அல்போன்ஸ் ராஜா ஆகியோா் பிரசாந்த்தின் சடலத்தை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.