வைகை அணை பூங்கா கரோனா பரவல் தடுப்பு முன்னேற்பாடாக வெள்ளிக்கிழமை (டிச.31) முதல் 3 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மற்றும் அரையாண்டு தோ்வு விடுமுறையில் உள்ள பள்ளி மாணவா்கள் அதிகளவில் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூடும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிா்க்க, வைகை அணை பூங்கா வெள்ளிக்கிழமை (டிச.31) முதல் வரும் 2022, ஜன.2-ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.
கரோனா பரவலை தடுப்பதற்கு மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.