பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வா் சேசுராணி தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் பி.ஜே.குயின்சிலி ஜெயந்தி முன்னிலை வகித்தாா். பெரியகுளம் சரக துணை காவல் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விழிப்புணா்வு குறித்து பேசினாா். விழா ஏற்பாடுகளை பெரியகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வைரமணி மற்றும் காவலா்கள் செய்திருந்தனா்.