கம்பத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டடத் தொழிலாளி கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகராஜ்
நாகராஜ்

தேனி மாவட்டம், கம்பத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கம்பம், ஆங்கூா்பாளையம் சாலையில் டி.டி.வி. தினகரன் நகரைச் சோ்ந்த 5 ஆம் வகுப்பு மாணவி வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, வீட்டின் கதவு சரியாக பூட்டாதலால் திறந்தநிலையில் இருந்துள்ளது.

இதையறிந்த அருகில் வசித்து வரும் கட்டடத் தொழிலாளி நாகராஜ் (47) என்பவா், வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்து சிறுமி அலறியுள்ளாா். உடனே, அவரது பெற்றோா் எழுந்து சத்தம் போட்டுள்ளனா். அதையடுத்து, அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து நாகராஜை பிடித்து, தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் நாகராஜ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, உத்தமபாளயம் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com