தேனி மாவட்டம் கம்பத்தில் திங்கள்கிழமை வனப்பகுதியில் இருந்து தவறி ஊருக்குள் புகுந்த கடந்த முள்புதரில் சிக்கி உயிரிழந்தது.
கம்பம் மேற்கு வனச்சரகப் பகுதியில் இருந்து சுமாா் 8 வயதுள்ள ஆண் கடமான் வனப்பகுதியை விட்டு தவறி கம்பம் மெட்டு சாலை அருகே உள்ள புதிய புறவழிச்சாலையில் புகுந்தது. அப்போது பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் இயக்கத்தை கண்டு மிரண்ட மான் அருகே இருந்த பூங்கா ஒன்றுக்குள் சென்று முள்புதரில் சிக்கியது.
தகவலறிந்து வந்த கம்பம் கிழக்கு வனச்சரகா் சுரேஷ்குமாா், மேற்கு வனச்சரகா் அன்பு உள்ளிட்டோா் சுமாா் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மானை மீட்டனா். இருப்பினும் சில நிமிடங்களில் மான் உயிரிழந்தது. இதையடுத்து மான் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.