தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் தமிழ்நாடு மருத்துவா் நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலா் ஏ.ராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மனோகரன் முன்னிலை வகித்தாா். இதில், மருத்துவா் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்பட்டுத்தப்பட்டோா் பிரிவில் 5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினா்.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி மாவட்டதில் அனைத்து முடிதிருத்தும் நிலையங்களும் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.