பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேவதானப்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் கோமதி தலைமை வகித்து, முகாமினை தொடக்கி வைத்தாா். தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சிவானந்தம் முன்னிலை வகித்தாா். முகாமில் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவா்கள், தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
இற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வ.பவானந்தனா், சுகாதார ஆய்வாளா்கள் ஜி.ரெங்கராஜ், கோபி சுப்புராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.