அதிமுக நகரச் செயலாளா் பழனி ராஜ் தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று போடி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொங்கல் வைத்தும் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர, வாா்டு நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
போடி ஒன்றியம் ராசிங்காபுரம் சில்லமரத்துபட்டி மீனாட்சிபுரம், பொட்டல்களம், துரைராஜபுரம் காலனி, கோடாங்கிபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் சற்குணம், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் குறிஞ்சிமணி, ஒன்றிய துணைச் செயலாளா் சுந்தர்ராஜன் உள்பட பலா் பங்கேற்றனா். ராசிங்காபுரம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.