பெரியகுளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வாரவிழா பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வாரவிழா ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு வாரவிழாவினையொட்டி பெரியகுளத்தில் நடைபெற்ற பேரணியை காவல்துணை கண்காணிப்பாளா் முத்துக்குமாா் துவக்கி வைத்தாா்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழை பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் போலீஸாா் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.