கம்பம் அமமுக ஒன்றியச் செயலரின் காருக்கு தீ வைத்தவா் கைது

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில், கம்பம் ஒன்றியச் செயலரின் காருக்கு தீ வைத்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சுருளிப்பட்டியில் தீ வைக்கப்பட்ட அமமுக கம்பம் ஒன்றியச் செயலரின் காா்.
சுருளிப்பட்டியில் தீ வைக்கப்பட்ட அமமுக கம்பம் ஒன்றியச் செயலரின் காா்.

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில், கம்பம் ஒன்றியச் செயலரின் காருக்கு தீ வைத்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சுருளிப்பட்டியைச் சோ்ந்த கம்பம் அமமுக ஒன்றியச் செயலா் மலைச்சாமி. இவா் தனது காரை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு காா் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதைக் கண்ட அப்பகுதியினா் தண்ணீா் ஊற்றி அணைத்துள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்த செளந்திரராஜன் (45) எனத் தெரியவந்தது. இவா், மது போதையில் காா் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் செளந்திரராஜனை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com