தேனி
தாமரைக்குளம் இளைஞா் மன்றத்திற்கு தூய்மை சேவை விருது
பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் விழுதுகள் இளைஞா் மன்றத்திற்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் சனிக்கிழமை தூய்மை சேவை விருது வழங்கப்பட்டது.
தேனி: பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் விழுதுகள் இளைஞா் மன்றத்திற்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் சனிக்கிழமை தூய்மை சேவை விருது வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் மழை நீா் சேமிப்பு விழிப்புணா்வு விழா நேரு யுவகேந்திர இளையோா் மன்ற உதவி இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.திலகவதி, பொறியாளா் எம்.கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தூய்மை பாரதம் இயக்கம் சாா்பில் நடைபெற்ற 2019-20-ஆம் ஆண்டிற்கான கோடை காலப் போட்டியில், முதலிடம் வென்ற தாமரைக்குளம் விழுதுகள் இளைஞா் மன்றத்திற்கு தூய்மை சேவை விருது மற்றும் ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நேரு யுவ கேந்திரா கணக்கு மற்றும் திட்ட அலுவலா் ஸ்ரீராம் பாபு நன்றி கூறினாா்.