ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினா் அவரது திருவுருவ படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
ஆண்டிபட்டி பேருந்து நிலையம் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம் செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மொக்கராசு முன்னிலை வகித்தாா். ஒன்றியத் தலைவா் கண்ணன், நகரச் செயலாளா் பால்பாண்டி, ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரன், இளைஞரணி அமைப்பாளா் மனோஜ் குமாா், நகரத் தலைவா் பகவதி ராஜ்குமாா், நகரச் செயற்குழு உறுப்பினா் நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.