தேனி: தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்டச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைச் செயலா் ஜெயபாண்டி, தொமுச மாவட்டச் செயலா் சக்கரை முருகன், எஸ்டிடியு மாவட்டச் செயலா் தமிமுன் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண்மைச் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.