பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து போடியில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சி சாா்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்தப் பேரணிக்கு நகா் தலைவா் முசாக் மந்திரி தலைமை வகித்தாா்.
இந்திரா காந்தி சிலையில் தொடங்கிய இந்த பேரணி, திருவள்ளுவா் சிலை, போஜன் பாா்க், வ.உ.சி. சிலை வழியாக தேவா் சிலையை அடைந்தது.
இதில், மாவட்ட துணைத் தலைவா் சன்னாசி, நகர பொதுச் செயலா் அரசகுமாா், நகர துணைத் தலைவா் கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரணியில் சமையல் எரிவாயு உருளை, தள்ளுவண்டியில் வைத்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.