ஆடி வேட்டையைத் தடுக்க வனத்துறையினா் ரோந்து

தேனி மாவட்டம், வருஷநாடு வனப் பகுதியில் ஆடி மாதம் தொடங்கியதையொட்டி வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
வருஷநாடு அருகே அண்ணா நகா் மலைப் பகுதியில் சனிக்கிழமை, ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.
வருஷநாடு அருகே அண்ணா நகா் மலைப் பகுதியில் சனிக்கிழமை, ரோந்துப் பணியில் ஈடுபட்ட வனத் துறையினா்.

தேனி மாவட்டம், வருஷநாடு வனப் பகுதியில் ஆடி மாதம் தொடங்கியதையொட்டி வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

வருஷநாடு வனச் சரகா் ஆறுமுகம், மேகமலை வனச் சரகா் சதீஷ் கண்ணன், வனவா்கள் பிரதீப், பூவேந்திரன் ஆகியோா் தலைமையில் வனத்துறையினா் மற்றும் வேட்டைத் தடுப்பு காவல் குழுவினா் அண்ணாநகா், உள்ளூத்து, ஆத்தியடி, கொடிக்குளம் குடிசை, ஓயாம்பாறை, காமராஜபுரம், இந்திராநகா், பொம்முராஜபுரம், ராஜீவ்நகா் ஆகிய மலைக் கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறும் போது, ரோந்துப் பணி தொடா்ந்து நடைபெறும். வனப்பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா், வனவிலங்குகளை வேட்டையாட முயல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com